குறுகிய அதிகார எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு மாநில அரசின் பட்ஜெட் இவ்வளவு கவனிக்கப்பட்டதையும், விவாதிக்கப்படுவதையும் இதுவரை நான் கண்டதில்லை. முதல்வர்
@mkstalin
, நிதியமைச்சர்
@ptrmadurai
இதற்கான தகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். 1/2
பிள்ளைகள் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை நண்பர்கள் அறிவார்கள் என நினைக்கிறேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் மகள் 482 மதிப்பெண் பெற்றிருக்கிறார்; பிரதான பாடங்களில் 98%. வாழ்க அரசுப் பள்ளிகள்! ஆசியர்களுக்கு வணக்கங்கள்!
பல அறிவிப்புகள் அக மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஒரு பெரிய அணியின் - பலருடைய உழைப்பும் கனவும் இதில் கொட்டிக்கிடப்பதை உணர முடிகிறது. சம்பந்தப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்! ☘️
அண்ணா எனும் சர்வதேச ஆளுமையை அவருடைய முழு முக்கியத்துவத்துடன் கண்டடைந்தது நான் பெற்ற பேறுகளில் ஒன்று; நான் எழுதிய முக்கியமான கட்டுரைகளில் ஒன்றென இதைக் கருதுகிறேன். ஒவ்வொரு தமிழரும் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய வரலாற்றின் துளி இது.
#மாபெரும்_தமிழ்க்_கனவு
இந்த ஆண்டில் 'அருஞ்சொல்' இதழில் அதிகம் வாசிக்கப்பட்ட, தளத்துக்கு உள்ளும் வெளியிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.
@ptrmadurai
எழுதியது...
#Arunchol_Best
மறைந்த தலைவர் விஜயகாந்த் இறுதியூர்வல ஏற்பாடுகளைத் தமிழக அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவருக்கு அளிக்கப்படும் மதிப்பு ஓர் அரசின் அரசியல் நாகரிகத்தை பிரதிபலிப்பது. முதல்வர் ஸ்டாலினுக்கும் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் பாராட்டுகள்.
@CMOTamilnadu
தமிழ்நாட்டில் அண்ணா அளவுக்கு எளிமையான தலைவர் எவரும் இல்லை என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இந்தச் சின்ன கதை.
திருச்சி விடுதியில் தங்கியிருக்கும் அண்ணாவை நள்ளிரவு 3 மணி வாக்கில்...
கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். 1/3
மிக முக்கியமான கட்டுரை. ரவீந்திரன் - திவ்யா காதல் கதையில் தொடங்கி இந்தியக் கல்விமுறையை எப்படி மேலும் மோசமானதாக்கும் அபாயக் கலாச்சாரத்தின் புள்ளியாக பைஜுஸ் திகழ்கிறது என்பது வரை எழுதியிருக்கிறார் மஜீத். அவசியம் வாசியுங்கள்; பகிருங்கள்.
அண்ணா ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’க்கு அளித்த முக்கியமான பேட்டியின் மொழியாக்கம்...
“அப்போதும் சரி, இப்போதும் சரி, நாங்கள் பிராமணர்களை வெறுக்கவில்லை. இதை உங்களுடைய பத்திரிகை வாயிலாக வலியுறுத்திச் சொல்லுங்கள்....
என்னுடைய பிரதான குற்றச்சாட்டு இதுதான்: 12 வருடப் பள்ளிக்கல்வியை இந்த நுழைவுத் தேர்வுகள் கொச்சைப்படுத்துகின்றன; அர்த்தமற்றதாக்குகின்றன. உயர் படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் நுழைவுத்தேர்வும் தனிப் பயிற்சியும்தான் வழி என்றால், 12 வருட பள்ளிக்கல்விக்கு என்ன பொருள்?
தவறவிடக் கூடாத கட்டுரை
¶
ராஜராஜனைப் பற்றி எந்த அடிப்படையில் வெற்றிமாறன் பேசினார்? இந்து என்ற சுட்டலுக்கும், சைவம் - வைணவம் என்ற சுட்டலுக்குமான வேறுபாடு என்ன? உங்கள் கருத்து எதுவாகவும் இருக்கட்டும். ராஜன்குறையின் இந்தக் கட்டுரையை அவசியம் வாசித்திடுங்கள்.
அண்ணாவும் கலைஞரும்தான் இலக்கிய உச்சம் என்று நாம் சொல்லவில்லை. அவர்களின் முக்கியப் பங்களிப்பும் அது இல்லை. ‘தம்பிக்கு…’ கடிதங்கள் மட்டும் மூவாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார் அண்ணா. அவருடைய அரசியல் உரைகள், கட்டுரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டிருந்தால் லட்சம் பக்கங்களைத் தாண்டும்.
பெரியாருக்கும் வைக்கத்துக்கும் என்ன பெரிய சம்பந்தம்; அந்தப் போராட்டத்தை அவர் தொடங்கவுமில்லை, முடிக்கவுமில்லை; ஏதோ போனார்; பங்கேற்றார் என்று பிரஸ்தாபித்தவர்களுக்கு சமர்ப்பணம்.
# தன் வாழ்வின்...
அதிரடிக்கிறார் தொ.பரமசிவம்..
“இனவுணர்வை மதவுணர்வால் வெல்ல முடியுமா?”
“முடியவே முடியாது. ஏனென்றால், இனம் உங்கள் பிறப்போடும், உடலோடும் உயிரோடும் கலந்திருக்கிறது. மதம் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மாற்றிக்கொள்ளக்...
சும்மா இல்லை.. 2500+ வார்த்தைகள்.. அச்சிட்டால் இரு முழுப் பக்கங்கள் வரும். ஆனால், பேயாக வாசித்திருக்கிறார்கள். மக்கள் இவ்வளவு கவனம் அளிக்கும் ஒரு விவகாரத்தைப் பெரும்பான்மை ஊடகங்கள் அடக்கி வாசிப்பது ஏன்? லாலு செய்திகளுக்கு இடம் பற்றாமல் போய்விடும் என்பதாலா?
இன்று
@Profdilipmandal
...
இந்தியில் சமூக நீதிக்காகப் பேசும் முக்கியமான குரல். பெரியார் - அம்பேத்கரை முன்னோடிகளாகக் கருதுபவர். இக்கட்டுரை வழி வட இந்தியா-பெரியார் தொடர்பான விவாதத்திற்கு அடிகோலுகிறார்.
என் வாழ்வில் கிறிஸ்து இருக்கிறார். என்னை வளர்த்தெடுத்தது கிறிஸ்தவப் பள்ளி. எனக்கான வாழ்வறத்தைப் போதித்ததும், எல்லாத் தவறுகளையும் தாண்டி சக மனிதர்களை நேசிப்பதையும் திரும்பத் திரும்ப எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் என்னுடைய கிறிஸ்தவ ஆசிரியர்கள்.1/2
உண்மையான அரசியல் என்பதே சுயமரியாதைக்கான தேட்டம்தான். தன்னுடைய சுயமரியாதைக்கும் சமூகத்தின் ஒவ்வொருவருக்குமான சுயமரியாதைக்குமான தேட்டம். சக குடிமக்கள் - சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குப்பதிவு நாள் வாழ்த்துகள். ஜனநாயகம் காத்திடுவோம்!
வங்கத்திலாவது மாநில அரசு மம்தாவின் கைகளில் இருந்தது; தமிழகத்தில் மாநிலத்திலும் ஒன்றியத்திலுமாக சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த ஒரு கூட்டணியை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஸ்டாலின் சாதித்திருக்கிறார்.
- சமஸ்
~
@writersamas
:)
பரந்து விரிந்த தொகுப்பாக 800 பக்கங்களில் வரும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ விரைவில் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டமாக நூலின் அட்டைப் படம் நாளை வெளியிடப்படுகிறது. அண்ணா...
இப்படியான கட்டுரைகள் பொக்கிஷம்... நேரு சம்பந்தப்பட்ட பல நூறு புத்தகங்களை வாசித்து ஒருவர் அடையும் புரிதலிலிருந்து உருவாகும் கட்டுரை. நீங்களும் வாசியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் வாசிக்கக் கொடுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
அரசியல் பழகு நூலில் இதையெல்லாம் எழுதியதோடு குறைந்தது நூறு மேடைகளிலேனும் குறிப்பிட்டிருப்பேன்.
மனிதர்கள் தாம் விட்டுச்செல்லும் மகத்தான நினைவுகளால்தான் காலத்தில் நிலைக்கிறார்கள்.
அஞ்சலி உம்மன் சாண்டி.
இந்தியாவில் ஆங்கிலம் நீடிக்க யார் காரணம்? அண்ணாவைப் புறந்தள்ளிவிட்டு இந்த விஷயத்தைப் பேசவே முடியாது. அதனால்தான் நாடறிந்த பொருளாதார அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான...
நிர்மலா சீதாராமனை ஏன் திமுகவினர் திட்டுகிறார்கள் என்று புரியவில்லை; அண்ணாமலைதான் புலம்ப வேண்டும். ஹெச்.ராஜா களத்தில் இல்லாத குறையை அம்மையார் பிரமாதமாக தீர்க்கிறார். தமிழ்நாடு முழுக்க இப்படி அம்மையார் பொதுக்கூட்டம் பேசிவந்தார் என்றால், தேர்தலில் திமுக போட்டியிடாமலேயே ஜெயிக்கலாம்!
கருணாநிதியின் வாழ்க்கை மஹாத்மாவினுடையது இல்லை; அதனாலேயே அது முக்கியமானதாகிறது. ஒரு சாமானியன் சறுக்கக் கூடிய எல்லா பலவீனங்களிலும் பலமான கருணாநிதி சறுக்கி விழுந்திருந்தார். எல்லா மேன்மைகளுக்கும் இடையே கீழ்மைகளும்...
சோரன் கைது, காங்கிரஸ் நிதி முடக்கம், கெஜ்ரிவால் கைது... இன்றைய தேதிக்கு பாஜக 225 தொகுதிகளைத் தாண்ட முடியாது என்ற பதற்றத்தில் மோதியரசு ஆடுகிறது என்பதே நிதர்சனம். உபி மோடி பக்கம் நின்றால், பிஹார் தேஜஸ்வி பக்கம் நிற்கிறது. மபி பாஜக பக்கம் என்றால், மஹாராஷ்டிரம் இந்தியா பக்கம்.. 1/3
கருத்துச் சுதந்திரமானது பொறுப்பற்றது என்று நினைப்பவன் இல்லை. அவதூறு, வசை, வன்மத் தாக்குதல்களுக்கு 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை. ஆயினும், உறுதிபடச் சொல்கிறேன்: 'கருத்துச் சுதந்திரம் தவறான கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதுதான்.'
1/4
'அதிகார மாற்றத்தின் குறியீடு செங்கோல்' எனும் ஒரு வரலாற்றுப் புரட்டுக்கும், பொய்க்கும் வெட்கமின்றித் துணை போன இந்த மடத்தலைவர்களில் எவருக்கும் ஆன்மிகத்தைப் பேச அருகதையே இல்லை என்று எண்ணுகிறேன். உள்ளபடி இவர்கள் தமிழ்நாட்டை இன்று அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்!
மாதத்துக்கு ஒரு கட்டுரை இப்படிக் கிடைத்தால் நன்றாக இருக்கும்? களத்திலிருந்து வரும் எழுத்து. என்ன மொழி! என்ன நடை! என்ன சித்திரிப்பு! ஆடுதொட்டியை நம் வீட்டுக்குள் இழுத்து வந்து போட்டிருக்கிறார் பச்சோந்தி. தவறவிடாதீர்கள். அவசியம் வாசியுங்கள்....
‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’
2/3
அறிஞர் அண்ணா என்கிற சர்வதேச ஆளுமையை அவருடைய முழுப் பரிமாணங்கள், முக்கியத்துவத்துடன் கண்டடைந்ததை நாற்பது வயதுக்குள் நான் பெற்ற பேறுகளில் ஒன்றாகவே கருதுகிறேன். நான் எழுதிய முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இதைக்...
ஏராளமான அறிவடையாளங்களால் தன்னை நிறைத்துக்கொண்ட கருணாநிதி, தன்னுடைய கட்சியின் தளபதிகளாக வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் - அவர்களில் பலர் அடாவடிகளுக்குப் பெயர் போனவர்கள். தலைநகர் சென்னையில்...
2015 சென்னை வெள்ளச் சீரழிவுகள் அன்றைய அதிமுக அரசு எந்தத் திட்டமிடல், தயார் நிலையும் இன்றி ஸ்தம்பித்திருத்ததால் நேரிட்டது. 2023 சென்னை வெள்ளச் சீரழிவுகள் இன்றைய திமுக அரசு எல்லாவற்றையும் தான் செய்துவிட்டதாக தனக்குத்தானே நம்பிக்கொண்டு மக்களையும் நம்ப வைத்ததால் நேரிட்டிருக்கிறது.1/4
திமுக கூட்டணியில் 2016க்குப் பிறகு, வளர்ச்சி அடைந்துள்ள ஒரே கட்சி விசிக என்பதை அந்தக் கூட்டணியில் உள்ளவர்களே ஒப்புக்கொள்வார்கள். சித்தாந்த அடிப்படையில் பாஜகவுக்கு எதிரான உறுதியான கூட்டாளியும்கூட விசிக. அதற்கு ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க திமுக இவ்வளவு ஏன் யோசிக்கிறது... 1/2
பத்திரிகையாளர்கள் தவறாமல் படிக்க வேண்டிய கட்டுரை என்று திரு.ரங்காசாரி எழுதிய இதைச் சொல்வேன்... பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல; தமிழில் எழுத விரும்பும் எவரும் படிக்கலாம்......
இதுவரை வாசிக்கவில்லை என்றால், இப்போதேனும் வாசித்திடுங்கள். வீட்டில் உங்கள் குழந்தைகளிடம் பகிரவும் மறக்காதீர்கள்.. சுஷில் ஆரோனுடைய அற்புதமான கட்டுரை!
‘இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு!’
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் என்னுடனான உரையாடலில் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறேன். சின்ன பத்திதான். வாசியுங்கள்.
எது சாதி ஆதிக்கர்களை கருணாநிதி மீது சாதி சார்ந்து காலங்காலமாக வெறுப்பை உமிழச் செய்கிறதோ, அதுவே தமிழ்நாட்டின் சாதி மீறல் வரலாற்றில் என்றைக்கும் கருணாநிதியின் பெயரைப் பொறித்துவைத்திருக்கும்; சாதி துவேஷத்தோடு அவர்...
தமிழர்கள் பெற்ற பொக்கிஷமாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றிய #மாபெரும்_தமிழ்க்_கனவு எனும் தகவல் களஞ்சியம் கைகளில் கிடைக்கப்பெற்றேன்...!😍
@writersamas
@TamilTheHindu
திருச்சியில் என்ன நடந்தது?
ஒரு ஊடகவியலாளராக கருணாநிதியின் பங்களிப்பை, ஜனநாயகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை ஊடகவியலாளர்கள் நினைவுகூரும் விதமாக திமுக சார்பில் புகழஞ்சலி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நானும் பேசினேன்....
அவர்கள் இந்நாட்டில் மதவெறியைத் தடுத்து நிறுத்த உறுதியாகப் போரிட்ட நல்லிணக்க நாயகர்களில் ஒருவராக லாலுவின் பெயரை எழுதுவார்கள்.
சீக்கிரம் குணம் அடையுங்கள்... தமிழ்நாட்டிலிருந்து பிரார்த்தனைகள்!
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் என்ற எண்ணம் எப்போதும் தங்கம் தென்னரசுவின் மீது உண்டு. அதை இந்தப் பேட்டி நிரூபிக்கிறது. வாழ்த்துகள் மகேஷ்!
2/2
இன்றைய ‘இந்து தமிழ்’ நடுப்பக்கப் பேட்டியை வாசிக்க:
ஐந்தாண்டுகளுக்கு முன் ‘இந்து தமிழ்’ நடுப்பக்கத்தில் வெளியான ஆழி செந்தில்நாதனின் முக்கியமான கட்டுரை... ஒவ்வொரு ஜனவரி 25-ம் தமிழர்க்கு ஏன் முக்கியமானது? அவசியம் படிக்கவும் பகிரவும்...