வெந்து தணிதது காடு திரைப்படத்தைக் கொண்டாடிய
தமிழே அறிந்திராத அமெரிக்கா, லத்வியா, இந்தியா, ரஷ்யா மற்றும் நேபாள நாட்டுக்காரர்களின் படம் தொடர்பான கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 9 வது சர்வதேச விருதை பெற்றிருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் எந்த ஊடகத்திலும் செய்தி பிரசுரிக்கத் தயாரில்லை என்பது, அதற்காக முயன்ற ஒவ்வொரு ஈழத்தவருக்கும் வருத்தமே. எங்கள் சினிமாவால் என்றைக்கும் உங்கள் வியாபாரத்துக்கு பங்கமில்லை தமிழகமே
அண்ணாவின் விடுதலைக்காக போராடிய அத்தனை உறவுகளுக்கும் அரசியல் சார்ந்தோருக்கும் குறிப்பாக ஊடகவியலாளருக்கும் பெரு நன்றிகள்.
நாளையிலிருந்து என் காலைகளுக்கு நான் அலாரம் வைக்க வேண்டும். இனிமேல் அம்மாவின் அழுகையில் எழும்பும் என் காலைகள் இன்றோடு முடிந்து விட்டது.
என் Tweet கண்டு ஆதரவுடன் அங்கீகாரித்த தாயக, தமிழக உறவுகள் அனைவருக்கும் என் உளப்பூர்வ நன்றிகள். படத்தின் பிரதான பாத்திரமேற்ற பார்வதி அம்மா அந்தமான் நிக்கோபரில் சிறந்த குணச்சித்திர நடிகை விருதை மீளவும் பகிர்கின்றேன்
”தமது படத்துக்கு முன்னதாக வர இருப்பதால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்களது கதை உலகுக்கு தெரிய வேண்டியது அதற்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு தம்மால் உதவ முடியும்” என்பதையும் மதிப்பிற்குரிய ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
#VendhuThanindhadhuKaadu
#mathisutha
#Simbu
#gvm
”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்துக்கு விருது.
Paris, France இல் இடம்பெறும் Auber International Film Festival இல் Best Original Screenplay பிரிவில் விருதைப் பெற்றிருக்கின்றது என்பதை தமது இணையத்தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருக்கின்றார்கள்.
அண்ணாவின் உடல் கட்டுநாயக்காவிற்கு, வழமையான பயணிகள் விமானத்தில் வந்தடைந்தது. ஞாயிறு காலை இல்லத்தில் சமய கிரியை இடம்பெறும். அதுவரை மலர்ச்சாலையில் மலராதிருப்பார்
சாந்தன் அண்ணாவின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு சற்று முன்னர் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் வீட்டு இறுதிக் கிரியைகள் பற்றிய தகவலை இரவு 8 மணிக்கு முன்னர் அறியத்தருகின்றேன்.
சகோதரன்
மதிசுதா
சர்வதேச தரம் வாய்ந்த விருதுப் போட்டி ஒன்றில் ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” தென்னிந்தியாவில் ஆர்யா நடிப்பில் உருவான ”மகாமுனி” திரைப்படத்தை முந்தி Best writer விருதை எனக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக எனது குடும்பமானது , நாம் வாக்கிட்டனுப்பும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. நான் இதைப் பேசினால் இந்திய அரசு குறை நினைக்காது என முதல் முதல் ஒரு மக்கள் பிரதிநிதி துணிந்திருக்கிறார். ஆனால் என்ன காலம் தான் மிகத் தாமதமாகி விட்டது.
இந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவனுக்கும் 2 தாய்கள் இருப்பார்கள். ஆனால் 2 வது தாயை நேசிக்கும் ஒவ்வொருவனின் பெத்த தாயின் கண்ணீருடன் தான் வாழ்ந்திருப்பாள். இந்த விடயத்தில் அம்மா பெற்ற 4 பிள்ளைகளும் அவரை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறோம். இனியாவது பெத்த தாய்க்காக ஏதாவது செய்ய வேண்டும்.
இந்தப் பதிவை பகிர்ந்த பிரதீபன் செல்வம், பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்காக பட்டம் பெற்று விட்டு DOP ஆக பணியாற்றும் முதல் திரைப்படமாகும்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் பின் இலங்கையில் இருந்து பட்டம் பெற்றவர் என்ற பெயர்ச் சுட்டலுக்குரியவராவார்.
ஊடகவியலாளர் மதி - வன்னிப் பாசறையின் அடையளம்
அம்மாவை செவ்வி எடுத்துக் கொண்டிருந்தவர் எடுத்த குறையில் கமராவை அப்படியே விட்டு நடந்து கொண்ட விதத்தைத் தான் எடுத்திருந்தேன்.
ஊடகவியலாளர் என்பது சாதாரண பணி அல்ல, அதைச் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொண்டவரும் இந்த உலகத்தில் உள்ளார்கள்.
சினிமா உருவாக்குனர்களுடன் ஒரு பட்டறை.
இருக்கும் வளங்களை எமக்கு எப்படி சாதகமாக்கலாம் ??
(அனுமதி இலவசம்)
ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் இப்படத்தை பகிருங்கள்
அற்புதம்மாவின் நேற்றோடு முடிவுக்கு வந்து விட்டது.
இதைப் போல ஒரு சந்தோச செய்தியை அவர் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்.
இதற்காக போராடிய அனைவருக்கும் நன்றிகள்.
இன்னும் 6 தாய்கள் இப்படிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மறந்துவிடாமல் மிகுதி ஆட்களையும் மீட்டுக் கொடுங்கள்.
சாந்தன் அண்ணாவின் இறுதி மாத நாட்களில் அவர் சுயநினைவுடன் இருந்த மணித்தியாலங்கள் என்பதே மிகக் குறைவு தான் அப்படி பேசும் நிலையிலும் அம்மா மேலான தனது ஆசைகளையும் அவருடனான பழைய நினைவுகளை மாத்திரமே பேசினார். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தனது 15-16 வயது நினைவுகளுடனேயே வாழ்ந்தார்.
எந்த மக்களுக்காக பொதுச் சேவைக்குள் நுழைந்தாரோ அந்த மக்களிடம் சாந்தண்ணா கெஞ்சிய மடல் ஒன்று.
23.4.23 அன்று எழுதிய இம்மடலை எனது இதே பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்திருந்ததுடன் அரசியல் தலைவர்களுக்கு மனுக்களும் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
Our film Tamil title released... this film told about eelam war story from the civilian side.
"மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றது”
தரவேற்றம் -
சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் அண்ணாவும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள். விரைவில் இலங்கைக்கு சட்டரீதியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த செய்திக்காக வேண்டிக்கொண்ட குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
சாந்தன் அண்ணாவின் உடலானது இலங்கையிலும் மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக் கிழமை இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
சாந்தன் அம்மாவுடன் இருந்த நாட்களில் ஒரு நாள் கூட 3 நேரமும் உணவுண்டதில்லை.
வீட்டின் வருமானமே காலை வேலைகளில் வீடு வீடாகச் சென்று காலை உணவு விற்பதேயாகும்.
அம்மாவுக்கு இருப்பது ஒரே ஒரு ஆசை
" ஒரு தடவையாவது தன் பிள்ளைக்கு , மூன்று நேர உணவையும் வயிறாற உண்ணக் கொடுக்க வேண்டும்"
ஒருவரை நான் தலைவராக ஏற்கின்றேன் என்றால் அவர் என் அடையாளமாக இருக்கின்றார் என்பதை விட அவர் சொன்னவைகளுக்கு நான் அடையாளமாக இருக்க வேண்டும்.
எம் சேனைகளின் பெரும் தலைவரினை இயற்கை எமக்களித்த நாளிது.
- மதிசுதா
தெற்கில் பரம ஏழை
குமாரதுங்கா பையனையும்
வடக்கில் வாழ்வழிக்கப்பட்ட
குமாரசாமி பொடியனையும்
குட்டி நாய்களுக்கு போல்
மூக்குரஞ்சி விட்டு
கொழும்பு நகரத்தின் ஏசிக்குள் வாழ்ந்த
சொறிக்கூட்டம்
இன்று வாழக் கதைக்கிறது
-மதிசுதா
ஊடகங்களுக்கு செய்தி தான் தேவையே தவிர அதன் உறுதித் தன்மை முக்கியமில்லை என்ற நிலை வருத்தத்திற்குரியது. அண்ணாவின் இலங்கை வருகை வெள்ளிக்கு பின்னரே சாத்தியம்.
பங்களாதேஷ் இலும் விருது ஒன்றை பெற்றிருக்கின்றது ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு”
Cinemaking international film festival இல் Best subject க்குரிய விருதைப் பெற்றுள்ளதாக அவர்களது தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இக் கோரத் தண்டனையிலும் பார்க்க 1998 இலேயே அவரை தூக்கில் இட்டிருந்தால் 23 வருடங்களும் நினைவுகளுடன் கடந்து போயிருப்போம்.
இன்றுடன் அண்ணா கைது செய்யப்பட்டு 30 ஆண்டு நிறைவடைகின்றது. இறுதிக்காலத்தையாவது சுதந்திரமாக சுவாசிக்கட்டும் அல்லது அவர்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்.
ஒவ்வொர் வருடமும் இதே நாளில் பகிர்வது தான் ,
31 வருட 4 சுவருக்குள்ளும் நீங்கள் கொண்டாடமாட்டீர்கள் தான் அண்ணா மன ஆறுதலுக்குச் சொல்லிக் கொள்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துகள்
அம்மா காத்துக் கொண்டிருக்கிறார் அடுத்த பிறந்தநாளுக்காவது வந்து விடுங்கள்.
▪️தமிழீழத்தின் பழம்பெரும் பாடகியும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் மூலம் விருது வாங்கிய பார்வதி சிவபாதம் அம்மாவோடு சிறப்புக் கீவெளி உரையாடல்.
▪️நாள்:- 28.11.2021 ஞாயிறு
▪️நேரம் :- 21:00 தாயக மற்றும் தமிழக நேரம். 👇🏽👇🏽
நேற்றைய தினம் நோர்வேயில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைக் காண ஒரு மணித்தியாலம் முன்னதாகவே வந்து காத்திருந்த மக்களில் ஒரு தொகுதியினர். அரங்கு நிறைந்த காட்சியாக சிறப்புத் திரையிடல் அமைந்தது. மீளவும் ஓடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
எனது திரைப்படம் தமிழருக்கு எதிரானது என்றால் உள்ள பிழையை பட்டியல்படுத்தலாமே அல்லது உங்கள் பொது வெளிக்கு என்னை அழைத்து உங்கள் கேள்விகளைத் தொடுக்கலாமே. ”அழைத்தும் வரவில்லை” என்று கூறுவது பச்சை பொய், தனிமனித காழ்ப்புகளால் உண்மையாக தேசியத்துக்கு உழைத்தவர்களையே துரோகி ஆக்குகின்றீர்கள்.
அண்மையில் , போராளிகள் நலன் காப்பகத்தால் வவுனியாவில் இடம்பெற்ற நினைவேந்தலில் இடம்பெற்ற இப்பாடலின் ஒரு பகுதியையே பகிர்ந்திருக்கிறேன்.
பாடியவர்- பார்வதி சிவபாதம்
இசை - இசைக்கபி விமல்
வரிகள் - வன்னியூர் வரன்
நன்றி - போரளிகள் நலன் காப்பகம்
சர்வதேச தரம் வாய்ந்த விருதுப் போட்டி ஒன்றில் ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” தென்னிந்தியாவில் ஆர்யா நடிப்பில் உருவான ”மகாமுனி” திரைப்படத்தை முந்தி Best writer விருதை எனக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
விடுதலையின் பின்னும் திருச்சியில் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தன் அவர்கள் கொடுத்துள்ள வழக்கு இன்று சென்னை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சிற்கு அவரது தயார் மனு அளித்ததாக சாந்தனது குடும்பத்தார் தெரிவித்திருந்தார்கள்.
பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் ஈழத்தில் இருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
சாந்தன் அண்ணாவின் பயணம்
12:30 க்கு இறுதி ஊர்வலம்
வீட்டிலிருந்து >> அறிவகம் சன சமுக நிலையம் ஊடாக >> தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக >> வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக >> நாவலடி >> உடுப்பிட்டி >> வல்வெட்டித்துறை >> பொலிகண்டி >> எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்....
@sureshkamatchi
மிக்க நன்றிகள் அண்ணா, சிம்பு அண்ணனுக்கும் எமக்கும் உறவுப்பாலமாக இருந்து எம் உணர்வை அங்கீகரிக்க நீங்கள் உழைத்த உழைப்புக்கு எம் படக்குழு நன்றிக்கடன்பட்டிருக்கின்றது. உங்கள் மனதுக்கு சான்று உங்கள் திரைப்பட வெற்றியே
ஈழத் தமிழர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த உன்னத மனிதனுக்கு அஞ்சலிக்கிறோம். முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் சாந்தன் அவர்களின் வழக்கறிஞராக இருந்தவரில் ஐயா மிக முக்கியமானவராவார். சாந்தன் அவர்களின் வழக்கை நகர்த்த வேண்டிய முக்கிய கட்டத்தில் ஐயாவின் இழப்பானது சாந்தனுக்கு பேரிழப்பாகும்
அமைச்சர் அவர்களின் அனுமதியின் பின்னர் ஆவண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாந்தன் அண்ணா தற்போதும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ்காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் மட்டுமே பார்ப்பதற்கு அவ்வப்போது அனுமதிக்கப்படுகின்றார்.
#Justice4Sandhan
என்ற தலைப்பில் தமிழக உறவுகளின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஜனநாயக தேசம் என்ற இந்தியாவில் அதைக் காப்பதில் தமிழக மக்களின் பங்கு மிகப் பெரியதாகும்.
நீதி தேவதையுடன் போராடும் சாந்தனின் தாயாருக்கு நல்ல பதிலை இந்திய அரசு கொடுக்குமா ?
சாந்தன் அண்ணா 2 PM க்கு அறிவகம் சன சமுக நிலையத்திலிருந்து-தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம்- ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி உடுப்பிட்டி-வல்வெட்டித்துறை (தேசிய தலைவர் இல்லம் சென்று) பொலிகண்டி-எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெறும்
சிறப்பு முகாமில் தனியறையில் 10 மாதமாக அடைத்து வைத்திருக்கும் சாந்தனை மீட்டுத் தரும்படி அவரது தாயார் வெளிவிவகார அமைச்சுக்கு 5 வது முறையாக யாழ் மாவட்டச் செயலகத்தினூடாக மனுக் கொடுத்துள்ளார். இவர் அளித்த எக்கடிதத்திற்கும் பதிலே கிடைத்ததில்லை எனக் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்
இறைவனிலும் இயற்கையிலும் நம்பிக்கை கொண்டவரை இக் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைக்கின்றேன். 54 வயதையுடைய சாந்தனுக்காக 77 வயது தாயார் 33 வருடங்களாகப் போராடி வருகின்றார். சட்ட இழுபறிகளின் பின்னர் அனுமதிகள் கிடைத்தாலும் நெருங்க முடியாத புது புது பெரும் தடங்கல்கள் உருவாகின்றது.
சிறப்பு முகாம் பெயரில் தனி அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் முருகன் (முருகனுடனிருப்பவர் சாந்தன்) அவர்கள் தொடுத்த வழக்கு நாளை நீதிமன்றுக்கு வருகின்றது.
நிச்சயம் இம்முறையும் வழக்கு நாள் தள்ளி வைக்கப்பட்டு அவர்களை மனதால் சித்திரவதையே செய்யப் போகின்றார்கள்.
@sowhatsenthil
வாழ்த்துக்கு மிக்க நன்றிகள், ஈழத்தவர் சம்மந்தப்பட்ட கதைகளை தமிழகத்தில் செய்யும் போது கொடுக்கும் ஆதரவை ஈழத்தில் இருந்து வரும் போது கொடுப்பது மிகக் குறைவு. விருதுக்குரிய ஆதாரங்கள் கொடுத்தும் கூட ஒரு செய்தியாக இடக் கூட தயாரில்லை
நீதிமன்றத் தீர்ப்பின்படி இவரை இலங்கைக்குள் அழைத்து வர ஆவண வேலைகள் மாத்திரமே உள்ளது.
நாம் வாக்களித்த தமிழ் அரசியல் தலமைகளிடம் "ஒரு வார்த்தையாவது இதைப் பற்றி வாய் திறவுங்கள்" என்று எவ்வளவோ கேட்டும் ஒருவர் கூட இதைப் பற்றி ஒரு சொல் வாய் திறந்ததில்லை.
இந்த புகைப்படமானது 2010 ம் ஆண்டு உடுப்பிட்டியில் உள்ள தேவாலயத்தில் அம்மா தொழும் போது எடுத்துக் கொண்டேன்.
எங்கள் தேசத்தில் தான் ஈன்ற குழந்தைகளுக்காக தன் மடி சேர வருடக்கணக்காக கர்ப்பத் தவம் செய்யும் தாய்களில் என் அம்மாவும் ஒருவராவார்.
இந்தப் படத்தை 5 வருட உழைப்போடு பூரணப்படுத்தினேன். சாதாரணமாக படம் தடை என்று விட்டுக் கடந்து போகும் அளவுக்கு என்ன உள்ளது ? கேள்விகளோடு வாருங்கள் பதில்களோடு நான்.
எம் வரலாறுகள் இன்னொருவர் உயிரால் எழுதப்பட்டவை நான் விட்டிருந்தாலும் தவறு தவறு தான்.
32 வருட தண்டனைக் காலம் முடித்தும் மீள் சிறையில் இருக்கும் ஒருவரை சொந்த நாட்டுக்கு கொண்டு வர முடியாத தமிழ் அரசியல் பிரதிநிதிகளாலா தமிழருக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர முடியும் என நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ???
முன்னாள் பிரதமர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு 11.11.2022 அன்று விடுதலை பெற்ற 4 பேரும் திருச்சி சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அதில் உடல் உபாதைகளுக்கு ஆளகியிருக்கும் ராபட் பயஸ் இன்றுடன் 4 வது நாளாக விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றார்.
தாயக தமிழ்நாட்டு அரசியல் முதன்மைகளிடம் கடிதம் அனுப்பிக் களைத்துப் போன அந்த தாய் உங்களிடம் கேட்கின்றார்.
இங்கு போகும் எந்த அரசியல்சார் பேச்சுக்களிலும் இந்தச் செய்தியைக் கொடுத்து இந்தக் கதையை அவர்களுக்கு நினைவூட்டி நீதி பெற்றுத் தர முடியுமா என ?
2018 ல் மகிந்த ராஜபக்சா வழங்கிய செவ்வி ஒன்றில், ராஜீவ் கொலைவழக்கு சம்மந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களிடம் ஆவணங்கள் இருந்தால் நாட்டுக்குள் வரலாம் என்கின்றார். சாந்தன் கடவுச்சீட்டு இருந்தும் 10 மாதமாக தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். please share this evidance
நோய்வாய்ப்பட்டுள்ள சாந்தன் நாட்டுக்கு வரமுடியாமைக்கான காரணம் இலங்கை வெளிவிவகார அமைச்சு பயண ஆவணம் கொடுக்காமையேயாகும். எந்த ஒரு M.P நினைத்தாலும் இந்த வேலையைத் துரிதப்படுத்தலாம்.
திருச்சியில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த சாந்தனை சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றியுள்ளார்கள். இதற்கு முந்தைய பதிவில் அவர்களுக்கிடம்பெறும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் இணைத்திருக்கிறேன்.
விடுதலையின் பின்னர் ஏன் ஒருவரை இப்படிக் கொடுமை செய்கிறீர்கள் ???
வாழ்த்துக்கள் தம்பி!❤️
ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "வெந்து தணிந்தது காடு" திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
1/3
யாழ் நல்லூரில் தடம் நிறுவனத்தின் கைகோர்ப்பில் இடம்பெறும் 2 நாள் வதிவிட சினிம. பயிற்சிப் பட்டறையின் ஆரம்பநாளின் கவ்வப்பட்ட சில காட்சிகள்.
இதில் creative writing for screen எனும் தலைப்பில் நானும் ஒரு வளவாளராக இருந்தேன்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இணைய வழியில் பணம் செலுத்திப் பார்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும். ஆர்வமுள்ள உங்கள் நண்பருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
சனி ஞாயிறு திரையரங்குகளிலும் வார நாட்களில் திரையரங்கற்ற இடங்களிலும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வியாழக்கிழமை வடமராட்சி கிழக்கிற்கு வருகின்றோம்.
உங்கள் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்க விரும்பினாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
இப்படி ஒரு செய்தி ஒரு தமிழ் ஊடகத்திலாவது இருக்கின்றதா ? ஆங்கில / சீனா ஊடகங்களில் முடுக்கி விடப்பட்டதன் நோக்கமென்ன ? பேரறிவாளண்ணாவுக்காக 7 தமிழர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்தவர் ஏன் இன்று அமைதியாகிவிட்டனர் ?
4 இலங்கை தமிழர்களும் மனிதர்களில்லையா ?
பேயை சிதம்பர சக்கரம் பார்த்த கதையை சிங்களத் தம்பியவையிடம் கேட்டு அறியலாம். எது Run எது wicket என scorecard இல் கண்டு பிடிப்பதே பெரும்பாடு. இந்த பெளத்தத்துக்கு ஒதுக்கும் கோடி நிதியையும் விளையாட்டுக்காவது ஒதுக்குங்களடா. உலகம் முழுக்க உங்களைப் பார்த்து கேவலமாச் சிரிக்குது