![தமிழ் மார்க்ஸ் Profile](https://pbs.twimg.com/profile_images/1426508738647642121/6ppfw7cO_x96.jpg)
தமிழ் மார்க்ஸ்
@tamilmarxorg
Followers
14K
Following
1K
Statuses
16K
Tamilmarx offers Marxist perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues. உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
Joined March 2021
21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம் தொடர் 7 @bakkiam1960 சீன அறிவுசார் மரபுகளில் மிக முக்கியமானது பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்வு முறைகள். அரண்மனைக்கு தேவைப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்கும் சிவில் சர்வீஸ் தேர்வு முறை நடத்தப்பட்டது.
0
2
8
#Leftist #Venezula #India #Immigrants அமெரிக்கவினால் நாடு கடத்தப்பட இருந்த 190 வெனிசுலா மக்களை வெனிசுலா இடதுசாரி அரசாங்கத்தின் சொந்த விமானத்தின் மூலமாக தன் மக்களது கண்ணியத்தை பாதுகாத்து அழைத்து வந்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்கிறது ? இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு சர்வதேச அளவில் அவமானப்படுத்தி ராணுவ விமானத்தில் அனுப்பிய அமெரிக்காவின் நடவடிக்கை வழக்கமான ஒன்று தான் எனவும், விமானம் மூலம் நாடு கடத்தப்படுவ��ற்கான விதிமுறைகள் 2012 முதல் அமலில் உள்ள SoP அடிப்படையில் சரிதான் எனவும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறது
0
8
30
#HateLab #HateSpeech இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 74.4% அதிகரித்துள்ளதாக இந்தியா ஹேட் லாப்(India Hate Lab) எனப்படும் அமெரிக்க அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மட்டுமே இஸ்லாமியர்களுக்கு எதிராக 63 முறை வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் சிறுபாண்மையினருக்கு எதிராக 233 முறை வெறுப்பு பேச்சு பேசப்பட்டுள்ளது. 2024 இல் இந்த எண்ணிக்கை 1,165 ஆக அதிகரித்துள்ளது. இதில் தான் பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் பாஜக தலைவர்களால் 450 முறை வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக வெறுப்பு பேச்சு உத்தரப்பிரதேசம்(242), மகாராஷ்ட்டிரா(210), மத்தியப் பிரதேசம்(98), ராஜஸ்தான்(74), உத்தரகாண்ட்(65), ஜார்க்கண்டில் 85 பீகார்(52)
0
4
5
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தொடர்கிறது திமுக அரசாங்கம். @CMOTamilnadu தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார்மய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் இயக்குவதற்கு ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகம்
0
3
7
#திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர், ஶ்ரீகாந்தர், கோவில்களின் பின் உள்ள பண்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரலாறுகளை மறைத்தும் திறித்தும் தான் பாஜக வன்முறையை தூண்ட முயற்சி செய்து கொண்டு உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பற்றும் பண்பாட்டு பின்னணி குறித்து இந்த காணொளியில் பேசப்பட்டுள்ளது.
0
3
10
#திருப்பரங்குன்றம் எச்.ராஜா அண்ணாமலைக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரடி சவால் @HRajaBJP @annamalai_k
0
1
4
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை கைது செய்துள்ளது, மேலும் இதற்கு சில தினங்களுக்கு முன் 97 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. கைது மட்டுமல்ல மீன்பிடி படகுகளை கைப்பற்றுவது, 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை மற்றும் 50,000 முதல் 2,00,000 இலங்கை ருபாய் வரை அபராதமும் விதிக்கிறது அந்நாட்டு அரசு. இவ்விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் S.ஜெயசங்கர் விரைந்து தலையிட்டு தீர்வு காண வேண்டும். இது தொடர் பிரச்சனையாக இருப்பதால் இரு நாட்டு அரசும் இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும். ஆனால் இந்திய அரசு வழக்கம் போல இவ்விசயத்தில் அலட்சியம் காட்டியே வருகிறது. #Srilanka #FishermenIssue #India #Tamilnadu
0
4
8
#ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு குற்றப்பத்திரிகையில் கலவரத்தை தூண்டியதாக அவரது அம்மாவை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது சிபிசிஐடி. கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2022 ஆம் ஆண்டு ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவிக்கு பள்ளி விடுதியில் தங்குவதற்கு பிடிக்கவில்லை என விசாரணை நடத்திய போது சக மாணவிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த விடுதியும் போதிய அனுமதி இல்லாமல் நடந்து வந்துள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீது என மொத்தம் 24,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் பள்ளி தாளாலர்,தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து பேரும் மாணவி மரணத்திற்கு காரணம் இல்லை என கூறியுள்ளது சிபிசிஐடி. மேலும் மாணவி மரணம் தற்கொலைதான் எனவும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரம் இல்லை எனவும் குற்றப்பத்திரிகை கூறியுள்ளது.
0
10
12
#Israel இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் சொல்வதை கேளுங்கள். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொலை செய்ய அவர் இருந்த பங்கர் மீது சுமார் 80 டன் வெடி குண்டை வீசியுள்ளது இஸ்ரேல் ராணுவம். முதலில் 40 டன் குண்டை வீச முடிவெடுத்துள்ளனர். அப்படி வீசினால் அந்த தாக்குதலில் அவர் கொல்லப்படுவதற்கு 90% வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால் காலண்ட் 80 டன் குண்டை வீச்சுங்கள் நஸ்ரல்லா படுகொலையாக 99% வாய்ப்பு இருக்கும் என சொல்லியுள்ளார். இது ஒரு அப்பட்டமாக சர்வதேச சட்டத்தை மீறிய படுகொலை.
0
7
11
Declining is the only growth under modi regime India's services sector growth slowed to a 2-year low in Jan, per HSBC India Services PMI. The index fell to 56.5 from 59.3 in Dec, signaling a significant loss in momentum. While still expanding (above 50), it's the weakest since Nov 2023. #IndiaEconomy #ServicesPMI
0
2
5
#சாம்சங் கடும் குளிரிலும் மூன்றாவது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்.. சிறையில் கூட போர்வை கொடுக்கப்படுகிறது. ஆனால் கடும் குளிரில் வெட்ட வெளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் மூன்று நாட்களாக உள்ள தொழிலாளிக்கு தரையில் படுக்க பாய் இல்லை. போர்வை இல்லை. கடினமான சூழ்நிலையில் நெஞ்சுறுதியுடன் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இரவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு #CITU கொடுத்த போர்வையை கூட உள்ளே அனுமதிக்க வில்லை நிர்வாகம். சங்கம் கட்டியதற்காக ஒவ்வொரு தொழிலாளியாக பிரித்து வேட்டையாடும் வேலையை செய்கிறது சாம்சங் நிர்வாகம். அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திராவிட மாடல். நிர்வாகத்தின் மனிதாபி மனமற்ற அராஜகமும் அதற்கு அடிபணியும் அரசின் அமைதியும் தொழிலாளர்களின் மன உறுதியை ஒருபோதும் நிலைகுலைய செய்யாது என்பதே வரலாறு.
2
20
50
விஸ்வ குரு என்ற வெற்றுப்புகழ் மோடி ஆட்சியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவமானம். அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது கூட கைவிலங்கை கழட்டி விடாமல் இந்தியர்களின் அடிப்படை மனித உரிமையை அமெரிக்கா மீறியுள்ளது. இவை எதற்கும் மோடி அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்க வில்லை. கொலம்பியா கூட அமெரிக்க விமானத்தை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என எதிர்த்து குரல் எழுப்பிய பிறகு அந்நாட்டு மக்களை பயணிகள் விமானத்தில் அனுப்பியது அமெரிக்க அரசு. இந்தியர்களை அமெரிக்கா நடத்திய விதம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைக்குணிவை ஏற்படுத்தியுள்ளது.
0
7
13
சாம்சங் வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. திமுக அரசு தொழிலாளர் நலத்துறை வழக்கம் போல தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. கோரிக்கைகள்:- சங்கம் அமைத்ததற்காக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி சங்கத்திலிருந்து வெளியேற நிர்வாகம் மிரட்டுவதை கைவிட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்துடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தால் இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். #samsungprotest
2
29
66