ஈஷாவின் கட்டிடங்களாலும் அங்கு வரும் வாகனங்களினாலும் யானை - மனித மோதல்கள் அதிகரிப்பதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தமிழக அரசிற்கு அனுப்பிய கடிதம்
#FreeVelliangiriHills
#ஈஷாவை_அரசுடைமையாக்கு
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆலையை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடு. இதனையே பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கோருகிறுது !!
“மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின்”(SIEAA) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், EIA 2006 சட்டத்தை மீறி நாங்களே எங்கள் கட்டிடங்களை கட்டிவிட்டோம்,அதனால் அனுமதி வாங்குவதற்கு தேவைப்படும் ஆய்வு எல்லைகளை (TOR)வரையறுத்து தாருங்கள்”என
@ishafoundation
நிறுவனம் அனுப்பிய கடிதம்.
காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ள இடத்தின் வரைபடம் இது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் துறைமுகத்திற்கு வடக்கே 300மீ தொலைவிற்கு கடலரிப்பு நிகழ்ந்துள்ளது. கிழக்கு பகுதியில் 670மீட்டருக்கு கடற்கரை உருவாகியுள்ளது.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையின் அமைச்சரும் திமுகவின் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு. மெய்யநாதன் அவர்கள் இன்று பூவுலகின் நண்பர்கள் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
#BREAKING
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது திருப்தியளிக்கவில்லை. நாம் தொடர்ந்த வழக்கில்ல் அவர் பதவியேற்க இடைக்கால தடை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.
தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? -பாகம் 2
கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து newslaundry இணையதளம் மூன்று பாகங்களாக அம்பலப்படுத்தவிருக்கிறது. பகுதி பகுதியாக அதன்
முன்னாள் தமிழ்நாடு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் நியமனம் செல்லும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளோம். விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
நீர்வளத்துறைக்கென தனியாக அமைச்சரவை உருவாக்கப்பட்டதையும், சுற்றுச்சூழல் துறையை, “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற” துறையாக அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். இவையிரண்டும் பூவுலகு வெளியிட்ட “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.
@mkstalin
@arivalayam
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்
@TThenarasu
அவர்களை இன்று நேரில் சந்தித்தோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தொழிற்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தோம்.
கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் நடந்த காலத்தில் இருந்தே எங்களுடன் துணை நின்ற இயக்குனர் தாமிரா அவர்கள் கொரோனா தொற்றால் இறந்தார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.
#RIPThamira
கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்ப பெறும் என்கிற அறிவிப்பிற்காக கூடங்குளம் மக்களோடு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தோம்.
@mkstalin
@arivalayam
@DMKITwing
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சுற்றுச்சூழல் தொடர்பான அரசின் பல்வேறு அறிவிப்புகளுக்கு நன்றி சொல்லிவிட்டு கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தோம்.
@mkstalin
மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்குவதும் இறந்து போவதும் மானுட பேரவலம். சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சூழல் அமைப்பாய் பூவுலகு மலக்குழி மரணங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.
அவ்வகையில் மானுட சமத்துவம் கோரும் கவிஞர் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக நிற்கிறது.
#WeStandwithViduthalaiSigapi
வரலாற்று சிறப்பு மிக்கநாள்;
காலநிலை மாற்றத்திற்கு
@Shell
நிறவனம் காரணம் என்று முதல்முறையாக ஒரு பன்னாட்டு நிறவனத்தை குற்றம்சாட்டி நெதர்லாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.இனி ஷெல் நிறுவனம் தன்னுடைய கார்பன் உமிழ்வை 45%த்தை 2030ஆம் ஆண்டிற்குள் குறைக்கவேண்டும். இதற்காக 17,379
அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
#stopadanisavepulicat
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்து மத்திய அரசுக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் நியமனம் செய்யப்பட்டார்
மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், ஜனவரி 6-ஆம் தேதி, எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன் நகர்த்துவது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.
(1/3)
மாமல்லபுரத்தில் உள்ள Radisson Blu Resort, கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை பெறாமல் கட்டிடங்களை கட்டியதால் 10 கோடி அபராதம் விதித்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
கடலில் இருந்து 0-200 மீ வரையிலான கட்டுமானங்களை அகற்ற உத்தரவு.
மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கருடன் இன்று முதலமைச்சரை சந்தித்தோம்.
3 வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டம், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் திட்டங்களில் திமுக அரசு எடுத்த நிலைப்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தோம்.
In the EIA 2020 draft, public consultation is exempted for projects including all building, construction and area development projects, inland waterways, expansion or widening of national highways among others. This is a recipe for disaster!
#ScrapEIA2020
பெருமழையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இதே தூத்துக்குடி மாவட்டத்தில் 7 மாதங்களுக்கு முன்பு
@SundarrajanG
பேசியது...
"இனி இயல்பு வாழ்க்கையே பேரிடர்களுக்கு நடுவில்தான்"
பூவுலகின் நண்பர்களின் நோக்கம் அனைவரும் பூவுலகுக்கு நண்பர்களாக மாற வேண்டும் என்பதுதான். கடந்த 30 ஆண்டுகளாக சூழலியல் குறித்து முக்கிய பங்காற்றி வரும் பூவுலகு, தமிழ்நாட்டில் சூழலியல் குறித்து செயல்படக்கூடிய பலருக்கும் “தாய்வீடு”.
அரியலூரில் 10 கிணறுகளும், கடலூரில் 5 எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை நேற்றைக்கே நிராகரித்து விட்டதாக தமிழ்நாட்டின் தொழிற்துறை துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தாங்கள் வாழ்ந்து வந்த இடத்தை துறைமுகம் அமைக்க 10ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்துவிட்டு, கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத எல்என்டி மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராக துறைமுக வாசலில் போராட்டத்தை துவக்கியுள்ளனர் காட்டுப்பள்ளி சுற்று வட்டார மக்கள்.
மனிதனால் மட்டுமே இன்னொரு உயிரினத்தின் மீது இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்த முடியும்.
தனியார் ரிசார்ட்டிற்கு சொந்தமானவர்கள் இதை செய்திருப்பதாக அறிகிறோம்.
கடும் வேதனைக்குள்ளாக்கும் இந்த காட்சிகளை காண முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர் உரிமையை பறிக்கும் அதானி
அதானி துறைமுக நிறுவனம் தனது காட்டுப்பள்ளி துறைமுகத்தை சுற்றியுள்ள கடற்பகுதியை "மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி" என அறிவிக்கக்கோரி அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பு திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி🙏
@mkstalin
ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை உள்ளிட்ட சூழலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவருக்கு 67 சூழல் ஆர்வலர்கள் எழுதிய கடிதம் 👇
@arivalayam
@mkstalin
@DMKITwing
@ksivasenapathy
இன்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர்
@V_Senthilbalaji
அவர்களை நேரில் சந்தித்தோம்.
தமிழ்நாட்டில் புதைபடிவ எரிசக்தி உற்பத்தியை குறைத்து விட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
மீனவர்களும் மீன்கடைகளும் இல்லாத சென்னை எப்படி சிங்காரச் சென்னையாக இருக்க முடியும்?
லூப் சாலைதான் ஆக்கிரமிப்பு, எதையாவது அகற்ற வேண்டுமெனில் அந்தச் சாலையைத்தான் அகற்ற வேண்டும்.
"லூப் சாலையில்தான் நீதிபதிகள் செல்ல வேண்டுமா" என மீனவர்கள் எழுப்பும் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை.
வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை decommissioning செய்யும் வேலையை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும்.
#DecommissionSterlite
#Sterlite
வடசென்னை பகுதியில் 18கிமீ வரை கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகியுள்ளது. கடந்த 69 ஆண்டில் 4கிமீ தூரத்த்திற்கு இருந்த உப்பு நீர் இப்போது 18கிமீ வரை ஊடுருவியிள்ளதாக ஆய்வில் தகவல்.
தலைமை செயலராக தனது பணிக்காலத்தில் ப்ளாஸ்டிக் தடை கண்காணிப்பு, மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு குழுக்களின் தலைவராக பணியாற்றிய அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவரது நியமனம் சரி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் அதற்கான காப்புரிமையை வாங்க மறுத்துவிட்டார். “இதற்கு வாங்கவேண்டுமெனில் எனக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கும் சேர்த்து கொடுக்கவேண்டும்” என்றார்-
@LawyerSundar
ட்விட்டர் ஸ்பேசஸில்
IPCC அண்மையில் வெளியிட்டுள்ள Climate Change 2021: the Physical Science Basis என்கிற அறிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடலை இன்று சென்னையில் ஒருங்கிணைத்திருந்தோம்.
#ClimateCrisis
#ClimateReport
@IPCC_CH
ஒரு சகாப்தம் முடிந்தது.
சுற்றுச்சூழல் போராட்டங்களின் முன்னோடி மறைந்தார்.
உங்களின் கரம் பற்றி நாங்கள் நடப்போம்;
உங்கள் கனவுகளை நினைவாக்க அயராது பாடுபடுவோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
போய் வாருங்கள் பகுகுணா.
#RIPBahuguna
சென்னை – சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தலை தடை செய்யக்கோரி "பூவுலகின் நண்பர்கள்" சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
#ChennaiSalemHighway
அனுமதியை ஒரு வழித்தடத்திற்கு வாங்கி விட்டு நீர்நிலையை ஆக்கிரமித்து வேறு ஒரு வழித்தடத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கு நிலக்கரி கன்வேயர் பெல்ட் அமைத்து வருகிறது
#TANGEDCO
.
வேதாந்தாவின் நோக்கம் ஆக்சிஜன் இல்லை, காப்பர் ஆலையை எப்படியாவது திறப்பது மட்டுமே...
"ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் ஆலையை இயக்க தமிழக அரசிற்கு நிபுணத்துவமும், அனுபவம் பெற்ற நபர்களும் இல்லை" - வேதாந்தா நிறுவனம்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில் கூறியுள்ளது
"தினசரி காலையில் நடைபயிற்சி செய்பவர்கள் கூட சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்". - கிரிஜா வைத்தியநாதன் வழக்கில் தலைமை நீதிபதி.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறோம். நிரந்தரமாக தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசை வலியுறுத்துவோம்.
#sterlite
சுவிஸ் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனி மலையில் புதிதாக 1,000 ஏரிகள் உருவாகியுள்ள தகவல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த "நீர்வாழி மற்றும் தொழில் நுட்பத்திற்கான"நிறுவனம் நேற்றைய தினம் வெளியான ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சுவிசில் உள்ள "பனி ஏரிகளை"
மீத்தேன்,நியூட்ரினோ, 8 வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலைகளுக்கு என சூழலை காக்கும் போராட்டங்களில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி. தேர்தல் பிரச்சாரத்திலும் அறிக்கையிலும் கொடுத்த வாக்குறுதியின்படி நீங்கள் செய்துள்ள
சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்?
எது கர்நாடக மக்களுக்கும் குஜராத் மக்களுக்கும் நன்மை கிடையாதோ அது தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை கிடையாது.
இன்று இரவு 9 மணிக்கு
@TwitterSpaces
பேசுவோம்.
ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டங்களை கைவிடவும் வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ ரத்து செய்யவும் இந்திய பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
@mkstalin
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூட்ரினோ தொடர்பான ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு வரைபடம் தயார் செய்ததில் நியூட்ரினோ உணர்க்கருவி அமைக்கப்படும் குகைப் பகுதி முழுவதுமாக மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசை இணைப்புப் பாதையினுள் வருகிறது.
இன்றைய ஆளுநர் உரையில் சூழலியல் பார்வையில் சில முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளதை வரவேற்கிறோம். விவசாயத்திற்கென தனியான நிதிநிலை அறிக்கை, இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டமும் கிராம சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முக்கியமான
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இயற்கை விவசாயப் போராளி நெல் ஜெயராமன் அவர்களின் கட்டிமேடு வீட்டிற்கு சென்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் மரியாதை செலுத்தினோம்.
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த உப்பூர் அனல்மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
கல்லுக்குட்டை ஏரியை சமூகத்தணிக்கை (Social Audit) செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
@JayaramArappor
@Arappor
#arappor
ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் 6 மாதம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கோரியுள்ளது வேதாந்தா.
இந்த நிலை வருமென்று முன்னரே எச்சரித்தோம்.தமிழ்நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தி முன்பைவிட அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு வேதாந்த நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்க்க வேண்டும்
@mkstalin
@KanimozhiDMK
கூடங்குளம் அணு உலையின்
விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும்! அதற்கான
அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும்!
………………………..............…
தமிழ்நாடு அரசுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
@thirumaofficial
@WriterRavikumar
@VanniArasu_VCK
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் முக்கியமான பணியாக நாங்கள் கருதுவது,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளையும், சமூக இயக்கங்களையும் சூழல் குறித்து அக்கறைப் படவைப்பது.அதில் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.மற்றபடி நாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை, காத்திருக்கவுமில்லை
திருமதி.கிரிஜா வைத்தியநாதனிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது
அமெரிக்காவில் கீஸ்டோன் XL எண்ணெய் குழாய் திட்டம் கைவிடப்பட்டது!
தங்கள் நிலங்களை அழிப்பதை தடுக்க பூ்ர்வகுடி சமூகங்கள் ஒன்றாக இணைந்து மிக கடுமையாக போராடின.
விவசாயிகள் முதல் செயல்பாட்டாளர்கள் வரை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தது அவர்களுடைய இயக்கம்.
நாம் ஒன்று சேர்ந்தால் எண்ணெய்
TANGEDCO வின் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல வழக்குகள், பல குழுக்கள், பல அறிக்கைகள், பல உத்தரவுகள் இருந்தும்கூட சூழலியல் குற்றத்தை தொடர்கிறது மின் வாரியம்.
சென்னை மூச்சு திணறி தடுமாறுகிறது, 45சிகரெட் பிடித்த சென்னைவாசிகள்.
பாட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக ஆபாயகரமான அளவுகளுக்கு சென்றுள்ளது.
Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
ஆனால் சென்னையின்
இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த செயலை செய்தவர்கள் மீதும் அதற்கான உத்தரவை கொடுத்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@CMOTamilnadu
@mkstalin
@evvelu
பூவுலகின் நண்பர்கள் குழுவில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் யாரும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் இல்லை. சொல்லப்போனால் மாநிலத் திட்டக் குழுவில் இருக்கும் மருத்துவர் சிவராமன் தடுப்பூசி ஆதரவாக கட்டுரை எழுதியிருக்கிறார்.
பொது புரிதலுக்காக இதை இங்கு பதிவிட வேண்டியது அவசியம்.
சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? - பாகம் 4
...கோயம்புத்தூரின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் HACAவின் தலைவராக இருந்த ராஜாமணி ஈஷாவுக்கு அளிக்கப்பட்ட HACA ஒப்புதல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று சொன்னார்.
சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் ஈஷா நிகழ்வுக்கும் அனுமதி ஏன்?
பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறையும் ஈஷா யோகாவுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - பூவுலகின் நண்பர்கள் அறிக்கை
@mahajournalist
@GunasekaranMu
@karthickselvaa
இந்திய நிலப்பரப்பை விட இமயமலை வேகமாக அதிக வெப்பமடைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இமயமலையில் உள்ள பனிமலைகள் 50% சுருங்கிவிடும். இந்த பனிமலைகளில் உற்பத்தியாகும் கங்கையை நம்பிதான் இந்தியாவில் 50கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்பதால் இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.