திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன். அனைவரும் ஆதரவு தர வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு மண்டலத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
பாரத பிரதமர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது மட்டும் போதாது.
ஒன்றிய அரசு தமிழ் மொழியை பாரதத்தின் ஆட்சி மொழியாக்கி தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இன்று பிறந்தநாள் காணும் திமுக தலைவர் திரு.
@mkstalin
அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக உரிமைகளை பாதுகாத்து மக்கள் நலன் போற்றும் அரசு அமைய அனைவரும் துணைநிற்போம்.
தமிழகத்தில் சாதி கலவரங்களை உண்டாக்க பிஜேபி தமிழ் மாநில தலைவர் முருகன் முயற்சி செய்கிறார். சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்வது போல ஆகும் என்று எச்சரிக்கிறோம். தமிழ் மண்ணில் சாதி கலவரங்கள் வரக்கூடாது என்று விரும்பினால் தன்னுடைய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்.
திமுக தலையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்..!
1.திருச்செ��்கோடு - ஈ.ஆர்.ஈஸ்வரன்
2.பெருந்துறை - கே.கே.சி.பாலு
3.சூலூர் - பிரிமியர் செல்வம்
தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் இரவு பகல் பார்க்காமல் தேர்தல் களப்பணியாற்றிய திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!
திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கின்ற அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி கட்டணத்தை திமுக கட்ட முன் வந்திருப்பதை பாராட்டுகிறோம். மாணவர்கள் சார்பாக திமுக தலைவர் மரியாதைக்குரிய
@mkstalin
அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்செங்கோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்..!
#ereswaranmla
#tiruchengode_mla
#KMDK
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன்.! ஆதரிப்பீர் உதயசூரியன்..!
இது படமல்ல பாடம், கதையல்ல நிஜம். பள்ளி, கல்லூரி பயிலும் பெண்களும், பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். #திரௌபதி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்குநர் திரு.மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரு.KKC.பாலு அவர்களுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..!
நேற்று இரவு மல்லசமுத்திரத்தில் தம்பி
@Udhaystalin
அவர்கள் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்த போது..!
சூலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரு.பிரிமியர் செல்வம் (காளிச்சாமி) அவர்களுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.! மற்ற சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அறிவுறுத்தினேன்..!
சமுதாயத்தில் பல சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காத்து குடும்பத்தை வழி நடத்தும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..!
திருச்செங்கோடு மக்கள் தலைநிமிர..!
திருச்செங்கோட்டை தலைநகராக்குவோம்..!
திருச்செங்கோடு தனி மாவட்டம் (திருச்செங்கோடு, குமாரபாளையம், சங்ககிரி, எடப்பாடி)
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
அருந்ததியர்களுடைய 10 ஆண்டு கோரிக்கையான 6 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் உயிரிழந்தால் உயிரிழப்பு அதிகம் என்று
@CMOTamilNadu
அவர்கள் ஏற்றுக்கொள்வார்.
தமிழக அரசு அதற்கு ஏதாவது இலக்கு வைத்திருக்கிறதா ?.
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாமக்கல்லில் திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்..! விவசாயிகளுக்காக தமிழகத்தின் ஒருமித்த குரலாய் ஒலிப்போம்..!
#KMDK
#DMK
#Namakkal
#EREswaran
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க இருக்கின்ற திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக பொறுப்பேற்க இருக்கின்ற திரு.T.R.பாலு அவர்களுக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிராமசபை கூட்டம் நடக்குமென்று தமிழக அரசு அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சி தலைவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் ரத்து செய்திருப்பது ஏமாற்று வேலை. கண்டனத்திற்குரியது.
இன்று (18.09.2021) தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் முதல் 100 நாட்களுக்கான என்னுடைய செயல்பாடுகளை தொகுத்து முத்தான முதல் நூறு நாட்கள் தலைநிமிரும் திருச்செங்கோடு என்ற தலைப்பில் புத்தகமாக வழங்கினேன்..!
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெஸிந்தா பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.!
இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை Apparels and Handloom ExportersAssociation தலைவர் திரு.அஜய் அகர்வால் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் நானும் உடனிருந்தேன்.
இன்று திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் மல்லசமுத்திரம் மோளியப்பள்ளி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்..!
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
2021 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு.
@CMOTamilNadu
அவர்களுக்கு கொமதேக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
வேல்யாத்திரை என்று அரசியல் செய்பவர்கள் மத்தியில்..!
பல ஆண்டுகாலமாக தைப்பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்களாகிய நாம் கையில் வேல் ஏந்துவதே சிறப்பு..!
கொரோனா இரண்டாவது அலை பரவலால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்.
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாஸ்கர் அவர்களின் ரவுடித்தனமான அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினரையே தாக்க முற்படும் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் சாதாரண மக்கள் எம்மாத்திரம்.
தீரன் சின்னமலையின் 216 -வது நினைவுநாளான இன்று, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். கொங்குநாடு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எழுச்சியோடு மரியாதை செலுத்தப்படுவது ம���ிழ்ச்சியளிக்கிறது.
சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பிரிமீயர் செல்வம் (எ) காளிச்சாமி அவர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்..!
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை இல்லாததன் விளைவு இது.
இன்று பெண்கள் பாதுகாப்பு தினமா அல்லது அதிமுகவிடம் இருந்து பெண்களை பாதுகாக்கின்ற தினமா ?.
நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. சிந்திக்க வைக்கும் கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். நடிப்போடு மட்டும் நிற்காமல் தமிழ் சமூகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர். கொமதேக சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற அனைத்து சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அரசு மறுத்தால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்.
#BC_Reservation
இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் கே.சிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் நான் உடனிருந்தேன்.!